பேழையில் வளர்ந்தது மூன்று முத்துக்கள் பேழையை சுற்றிலும் எண்ணிலடங்கா முத்துக்கள் கடும் புயலிலும் கனமழையிலும் கடல் கொந்தளிப்பிலும் தடுமாறும் பேழையை(பேதையை) ஆயிரம் கரங்கள் கொண்டு அரவணைக்கும் என் அன்பு குழந்தைகளே முற்பிறவியில் செய்த பாவம் எனை அலைக்கழிக்கிறதே என கண்ணீர் உகுத்து நிற்கும் போது உங்கள் தளிர் கரங்கள்(அம்மா என்ற அன்பு வார்த்தைகள் ) கொண்டு என்னை வருடும் போது நான் அனுபவிக்கும் சுகம் சொல்லில் அடங்காது இனி நான் பாவம் செய்தேன் என கருதாமல் முற்பிறவியின் புண்ணியம் உங்கள் அருகே என்னை சேர்த்ததே என பெருமிதம் கொள்வேன் என் அன்பு கண்மணிகளே கிருஷ்ணா உன்னை மகனாக அடைய யசோதா செய்த தவம் கடல்அளவு இந்த அன்பு குழந்தைகளை பெற நான் செய்த தவம் எத்தனை பெரியதோ அறியவில்லை ஒன்று மட்டும் சொல்வேன் உன் கருணையின் பலனே இந்த பாக்கியம்
காலையில் கண் விழித்ததும் என் பிறந்த நாள் வாழ்த்து கண்ணில் பட்டது .நம் ஐயல் தளத்தில் ஒரு அன்பு மகள் வாழ்த்து செய்தி அனுப்பி இருந்தார் .இன்னொரு மகள் வேறொரு தளத்தில் வாழ்த்துக்கள் அனுப்பி இருந்தார் .இந்த பிள்ளைகள் என் பிறந்த நாளை இப்படி நியாபகம் வைத்துள்ளனரே என நினைக்க நினைக்க கண்ணீர் மல்கியது .அந்த கண்ணீரின் விளைவே இந்த கவிதை .எந்த ஜென்மத்து பந்தமோ என்னை தொடர்கிறது .பெரும் பேறு பெற்றவள் நான் . மிக்க நன்றி மக்களே