தாய்க்குப் பாலுண்டு தாய்மைக்குப் பாலில்லை ! சேய்க்குத் தாலாட்டும் தந்தைக்கு சூலில்லை ! நோய்க்கு மருந்தொன்று அன்புக்கு மேலில்லை ! வாய்மைக்கு நிகரெந்த ஆயுதமும் வலுவில்லை ! வாடும் பயிர்க்கெல்லாம் நீரின்றி உயிரில்லை ! தேடும் பொருளுக்கும் பகிர்வின்றி உயர்வில்லை ! கேடில் குணத்தாலே வருமின்பம் அயர்வில்லை ! கூடி வாழாமல் தனித்திருத்தல் இயல்பில்லை ! நாட்ட மெதன்மீதும் மிகவாதல் சரியில்லை ! ஆட்டம் அகம்பாவம் கைக்கோடல் உரித்தில்லை ! ஈட்டும் பொன்பொருளால் நிம்மதி பெரிதில்லை ! பூட்டி வைக்காமல் பகிர்ந்துண்பார் மரிப்பதில்லை ! ஊக்கம் குறையாமல் முயற்சித்தால் பிழையில்லை ! ஆக்கம் எதிர்மறையாய் இருப்பின் அழகில்லை ! ஏக்கம் எதிர்ப்பார்ப்பு வாழ்க்கைக்கு வழியில்லை ! தேக்கம் கொள்ளாமல் செயலாற்றின் பழியில்லை ! அடக்கம் இல்லாத அஞ்சாமைத் துணிவில்லை ! முடக்கம் மனத்துள்ளே உண்டாகில் அணியில்லை ! கடக்கும் அனுபவத்தாலுறும் பாடம் பிணியில்லை ! நடக்கு மெல்லாம் நலமென்றுணர வினையில்லை ! நேர்மைக் கடைப்பிடிக்க வாழ்வில் கறையில்லை ! சேர்க்கை சரியின்றேல் விளைவால் நிறையில்லை ! நீர்மை மாறாமல் உறவாடல் குறையில்லை ! தீர்வைத் தெளிந்திடிலோ தடைகள் சிறையில்லை ! Regards, Pavithra
@PavithraS ஆஹா! இல்லை என்ற சொல் எடுத்து கோர்த்து எடுத்த கவிதை மாலை என்றும் வாடாது வசங்காது மணம் வீசும் அரியதோர் மாலை