சில சமயம் உன் தோள் சாய என் மனம் விரும்பும் சில சமயம் உன் கரம் பற்ற என் கரம் தவிக்கும் சில சமயம் உன் குரல் கேட்க என் செவிகள் ஏங்கும் சில சமயம் உன் மடியில் தலை சாயிக்க உள்ளம் துடிக்கும் சில சமயம் உன் பாதம் தொழ என் உடலும் உள்ளமும் பரிதவிக்கும் .... சில சமயம் மனதின் வலுகுறைய தனிமையின் துயர் துறத்த சாய உன் தோளின்றி பற்ற உன் கரமின்றி உரையாட நீயின்றி நிற்கும்பொழுது புரிந்தது அனாதையானது நான் மட்டுமல்ல என் மனதின் அழுகுரலும் .... என்றும் நீயின்றி நானில்லை !