கனவில் கவிதையாய் ... கதிரவன் அஸ்தமிக்கும் அந்தி வேளையில் கீழ்வானம் தங்கத்தில் அழகாய் ஜொலிக்க கடற்காற்று மெல்ல முகத்தில் வீச அலைகளில் நனையாது தொடுவானை ரசித்தபடி அவர் கரம் பற்றி மெதுவாய் மணலில் கால் பதித்து கடற்கரையில் நடக்க மனதில் அத்தருணம் மகிழ்ச்சியும் நிறைவும் பூரிக்க கீழே கொட்டி கிடந்த கிளிஞ்சல்ளை கையில் அள்ள எத்தனிக்கையில் கிளிஞ்சல்கள் மறைய கதிரவன் ஒளிமங்க இரவில் நிலவை மட்டுமின்றி உடனிருந்தவரையும் தேட கடலும் மறைந்து காற்றும் கரைந்து வியர்த்து நின்றாள் கனவில் தனியாக .... உலக கனவு தினமாம் இன்று கனவில் கவிதையாய் வந்தாய் நன்று .... கனவில் உன்னை கண்டது நிஜம் கடற்கரையில் உலவியது நிஜம் உன் குரல் காதில் ஒலித்தது நிஜம் கண்விழித்தபொழுது கனவு மட்டுமே நிஜம் !
என்னருமைத் தோழி ! இந்தக் கனவுகள் உங்களை விடுவதாயில்லை போலும் ! ஆயினும் உங்கள் கனவுலகத்தில் எங்களுக்கும் இடம் தரும் வகையில், கவிதைகளைக் கொண்டு தரும் கனவுகளை நாங்கள் எப்படி வைவது ?! கனவுகளுக்கென்று ஓர் தினம் அனுசரிக்கப்படுகின்றதா ? புதிய செய்தி ! நன்றி !
லக்ஷ்மி ஒரு கனவு தேவதை ..அவள் காணும் கனவுகளோ தேவலோகத்தையே அசைத்து விடும் .உங்கள் கவிதை கடலோரம் உலவி விட்டு வந்த உணர்வை தந்தது