பெரிய நம்பர் நடிகை இப்போது சிவனான இயக்குநருடன் லிவிங் டூகெதரில் இருந்து வருகிறார். அபார்ட்மெண்ட் ஒன்றில் ஒன்றாக வசித்தவர்கள் சமீபத்தில் பிரிந்தனர். நடிகை தனியாக ஹோட்டலில் வசித்து வந்தார். ப்ரேக் அப் என்றும் செய்திகள் வந்தன. ஆனால் திடீர் திருப்பமாக கடந்த வாரம் மீண்டும் வீட்டுக்கே திரும்பி விட்டார் நடிகை. இதன் காரணம் தெரிய வந்துள்ளது. மனக் கசப்பு வந்து பிரிந்தது உண்மையாம். ஆனாலும் விடாத காதலர் நடிகைக்கு ஐஸ் மேல் ஐஸ் வைத்து திரும்ப மனதிலும் வீட்டிலும் இடம் பிடித்திருக்கிறார். பெண்கள் தினத்துக்கு நடிகையை புகழ்ந்து ட்விட் போட்டவர் நடிகை நடித்து சமீபத்தில் வெளியான பேய் படத்துக்கு சென்சாரில் ஏ கொடுத்ததற்காக சென்சாரையே வசை பாடினார்.எல்லாவற்றுக்கும் மேலாக நடிகைக்கு உடல்நிலை சரியில்லை என்றதும் துடித்துப்போய் அருகில் இருந்து பார்த்துக்கொண்டாராம். இவற்றின் விளைவாகவே மீண்டும் நடிகையின் மனதில் இடம் பிடித்திருக்கிறார் என்கிறார்கள். யாருக்கும் கிடைக்காத காதலர்தான்...!
வம்பு நடிகரிடம் கதை சொல்லி அது ஓகே ஆகி படம் எடுத்து வெளியிடுவதற்குள் கேரளாவுக்கு அடிமாடாகக் கூட போய்விடலாம். இருந்தாலும் கூட சிம்புவுக்கு கதை சொல்ல ஒரு கூட்டம் அலைகிறது. அப்படி சமீபத்தில் போய் கடுப்பாகி திரும்பிய ஒரு இளம் இயக்குநரின் அனுபவம் இது. கதை சொல்லி முடித்ததும் ஒரு முக்கியமான கேரக்டரைச் சுட்டிக் காட்டி, 'இதை ஃபீமேல் லீடா மாத்திடுங்க... அந்த கேரக்டருக்கு ரீ என்ட்ரி ஆகியிருக்கிற ஜோவான நடிகைதான் மேட்ச் ஆவாங்க. அவங்ககிட்ட சொல்லி ஓகே வாங்கிடுங்க... நானே பண்றேன்' என்று சொல்லியிருக்கிறார். இதெல்லாம் நடக்குற காரியமா? என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட இயக்குநர் அப்புறம் அந்த பக்கம் போகவே இல்லையாம்...!
மங்களகரமான நடிகை ஊதிப் போனதால் வாய்ப்பில்லாமல் தவித்தார். பின்னர் உடலைக் கொஞ்சம் குறைத்து டான்ஸ் மாஸ்டர் ஹீரோவுக்கு ஜோடியாக ஒரு காமெடி படத்தில் நடித்து வருகிறார். அந்த 'ஃப்ரெண்ட்ஷிப்பை'ப் பயன்படுத்தி ஹிந்தியில் கால் பதிக்கத் திட்டமிட்டுள்ளாராம். மாஸ்டரை வைத்து எப்படியாவது பாலிவுட்டுக்குள் நுழைந்துவிட வேண்டும் என்பதுதான் மாஸ்டர் ப்ளானாம். இதற்காகத்தான் மாஸ்டருடன் நடிக்க வந்த வாய்ப்பை உடனே ஏற்றுக்கொண்டாராம். பாலிவுட்டுக்காக எந்த லெவலுக்கு வேண்டுமானாலும் இறங்கி நடித்தச் தயார் என சிக்னலும் கொடுத்துவிட்டாராம். நடிகையின் வேண்டுகோளுக்கு இதுவரை க்ரீன் சிக்னல் காட்டவில்லை மாஸ்டர். இருந்தாலும் விடாமல் டார்ச்சர் தந்து வருகிறாராம். பாவம்மா பாலிவுட்...!
சென்னை: குடும்பத்தை பற்றி கேள்வி கேட்டால் பிக்கப் டிராப் நடிகரின் லேட்டஸ்ட் காதலிக்கு மூக்கிற்கு மேல் கோபம் வருகிறதாம். பிக்கப் டிராப் நடிகரின் வாழ்வில் காதல்கள் வருவதும் போவதுமாக உள்ளது. இந்நிலையில் அவருடைய லேட்டஸ்ட் காதலி என்று ஒரு மலைவாழ் பெண்ணாக நடித்த நடிகையின் பெயர் அடிபடுகிறதுஎந்த வசதியும் இல்லாத காட்டில் படத்திற்காக நடிகர் எப்படி கடினமாக உழைத்தார் தெரியுமா என நடிகை பெருமையாக பேசியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும்போது தான் இருவருக்கும் இடையே பிக்கப்பாகிவிட்டது என்று கூறப்படுகிறது. இந்நிலையில் நடிகையிடம் அவரின் பெற்றோர், குடும்பம் பற்றி கேட்டால் பொசுக்குன்னு கோபம் வருதாம். படத்தை பற்றி கேளுங்க குடும்பத்தை பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்கிறாராம். மேலும் எந்த கேள்வி கேட்டாலும் முகத்தை தூக்கி வைத்துக் கொண்டே பதில் சொல்கிறாராம்.
தாடி நடனத்துடன் சேர்ந்து நடிக்கும் நடிகைகள் எல்லாம் அவருடன் கிசுகிசுக்கப்படுவார்கள். அந்த வரிசையில் லேட்டஸ்டாக இணைந்தவர் ஸ்லிம் நடிகை. இருவரும் நெருக்கமாகி விட்டனர். தாடி இயக்கும் அடுத்த படத்திலும் நடிகை தான் நடிப்பார் என்று கிசுகிசு வந்தது. ஆனால் நடனம் அடுத்து சண்டக்கோழியையும் காட்டன் வீரனையும் வைத்து இயக்கும் படத்தில் நடிகை இல்லை. ஒரு புது நடிகை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ஆனாலும் ஸ்லிம் நடிகையுடன் நெருக்கம் தொடர்கிறது என்கிறார்கள். ஸ்லிம் நடிகை ஆல்ரெடி ஹிந்திப் பக்கம் போய் தோல்வியோடு திரும்பி வந்தவர். எனவே மீண்டும் அங்கே போய் வெற்றிக்கொடி நாட்ட ஆசைப்பட்டுள்ளார். தனது பாலிவுட் செல்வாக்கை பயன்படுத்தி நடிகைக்கு வாய்ப்பு வாங்கிக்கொடுத்துள்ளாராம் இயக்குநர்.
தமிழ் சினிமாவில் இப்போது கையில் அதிகம் படம் வைத்திருப்பவர் அந்த ஹீரோதான். எந்த கேரக்டராக இருந்தாலும் அந்த கேரக்டராகவே மாறிவிடுவார் மனிதர். வயதான வேடம், இன்னொரு ஹீரோவுடன் சேர்ந்து நடிப்பது என எந்த கதாபாத்திரமாக இருந்தாலும் சரி, தன் மனதுக்கு பிடித்து விட்டால் செய்து விடுகிறார். படம் ஒப்புக்கொள்ளும்போது இரண்டு விதங்களில் சம்பளம் கேட்கிறாராம். பெரிய தயாரிப்பாளர், கமர்ஷியல் படம் என்றால் அதிகமான சம்பளம். சின்ன படமாக இருந்தாலும் கூட கதை நல்ல கதை, கேரக்டர் கண்டிப்பாக பேசப்படும் என்றால் வழக்கமான சம்பளத்தில் இருந்து கணிசமான அளவுக்கு குறைத்துக் கொள்கிறாராம். இதனால் தயாரிப்பாளர்களும் இவர் மீது மட்டும் எந்தக் குறையும் சொல்வதில்லைஆனால் ஒரு படம் இப்படி, ஒரு படம் அப்படி என்பதில் கவனமாக இருக்கிறார். நல்ல பாலிசிதான்!
சென்னை: கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக சித்தியின் அலுவலகத்தில் நடந்த வருமான வரித்துறை சோதனையில் வரி ஏய்ப்பு குறித்த ஆவணங்கள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் வீட்டில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அமைச்சரிடம் தொடர்ந்து விசாரணையும் நடந்து வருகிறது.நாட்டாமையின் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். என்னிடம் எதுவும் இல்லை நீங்கள் தான் எதையாவது கொடுக்க வேண்டும் என்றார் நாட்டாமை.இடைத்தேர்தலில் ஆளும்கட்சிக்கு ஆதரவு தெரிவித்தார் நாட்டாமை. ஆளும்கட்சியின் முக்கியப் புள்ளியிடம் பல கோடி ரூபாய் பெற்றுக் கொண்டே நாட்டாமை ஆதரவு தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. வருமான வரித்துறையினர் அரசியல் தொடர்பான பண பரிமாற்றம் குறித்து ஏதாவது சிக்குமா என்று எதிர்பார்த்து அலுவலகம் சென்ற இடத்தில் நடிகை ரூ. 4 கோடி வரி ஏய்ப்பு செய்த ஆவணங்கள் சிக்கியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அவருக்கும், கணவருக்கும் இடையே பிரச்சனை, இருவரும் பிரிந்துவிட்டனர் என்று கடந்த ஆண்டு செய்திகள் வெளியாகின. இதை நிகழ்ச்சி தொகுப்பாளினி மறுத்தார். தற்போது நிஜமாகவே அவரும், அவரது கணவரும் பிரிந்துவிட்டார்களாம். கடந்த சில மாதங்களாகவே இருவரும் பிரிந்து தான் வாழ்கிறார்களாம். தொகுப்பாளினியும் தனது பெயருக்கு முன்னாள் இருந்த திருமதியை நீக்கிவிட்டு செல்வி என்று போடுகிறாராம். இந்த பிரிவு குறித்து அறிந்த நெட்டிசன்களோ, இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு என்று ஒரு நடிகரை கலாய்த்து வருகிறார்கள்.
எங்கேயும் எப்போதும் என்று லிவிங் டூ கெதராக வாழ்ந்துகொண்டிருக்கும் ஜோடிக்குள் புகைச்சல் ஆரம்பித்துள்ளதாம். மார்க்கெட் நடிகையும் இரண்டெழுத்து நடிகரும் உயிருக்கு உயிராக காதலித்து வருவதும், இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டூ கெதராக வாழ்ந்து வருவதும் அனைவரும் அறிந்ததே... நடிகைக்கு இன்னும் வாய்ப்பு வரும். மேரேஜ் பண்ணி விட்டால் அந்த வாய்ப்புகள் தடைபட்டு விடும் என்ற பயத்தில் இத்தனை நாட்களாக கல்யாணத்தைப் பற்றி யோசிக்காமல் இருந்தனர். காத்திருந்து காத்திருந்து பார்த்தும் கூட பெரிய வாய்ப்புகள் இனி வருவது போல் தெரியவில்லை. எனவே திருமணம் செய்துகொள்ளலாம் என்று நடிகை வற்புறுத்துகிறாராம். இன்னும் கொஞ்ச நாள் வெய்ட் பண்ணுவோம். வாய்ப்பு வரும். லிவிங் டூ கெதராக அதுவரை இருக்கலாம் என்று நடிகர் சொல்கிறாராம். இதனால் இருவருக்கும் இடையே புகைச்சல் தொடங்கியுள்ளது என்கிறார்கள்.
I'm unable to find many clues from your posts .. Enna ivlo kashtama irukku ? Who is Sarchai nadigai ? Who is Slim nadigai ? Who is pickup drop nadigar ?