அன்னையின் அன்பை அனுபவிக்கும் கண்ணா உன் அன்பை நாங்கள் அனுபவிக்க வேண்டாமா நிலை மத்து கொண்டு தயிர் கடையும் யசோதையே நிலையான கண்ணன் உன் அருகிருக்க என்ன தவம் செய்தாயோ தயிரில் திரளும் வெண்ணைக்கு தவம் கிடக்கும் கண்ணா என் கண்ணில் திரளும் நீர் துடைக்க உன் பிஞ்சு விரல் ஸ்பரிசம் வேண்டி தவம் கிடக்கிறேன் நானும் வெல்ல அவலும் நவநீதமும் துளசியும் தண்ணீரும் நான் தருவேன் உனக்கு வெண்ணெய் உண்ட வாயால் முத்தம் தர வேண்டும் நீ எனக்கு வருவாயா என் இல்லம் தருவாயா நான் கேட்டதை
கண்ணனின் உருவில் பேரனை அழைக்கும் கவிதை சூப்பர்ம்மா. வருவான் தருவான் வேண்டுவதை வேண்டியபடி திரளும் வெண்ணை திகட்டா முத்தம்
ஏக்கமே தவமாக, ஏதிலிக்கும் இறங்கும் ஏழ்கடல் வண்ணன் எண்ணம் போல் வருவான் எண்ணியதைத் தருவான் பெரியம்மா! சீக்கிரமே உங்கள் ஏக்கம் தீர வாழ்த்துக்கள்! -rgs