ஐந்து நிமிடத்தில் கடைத்தெரு.. இரண்டு நிமிடத்தில் பஸ் ஸ்டாண்ட்.. வீட்டுக்குப் பின்னே பள்ளிக்கூடம்.. பொடி நடையில் கோவில்.. நினைத்தவுடன் குச்சி ஐஸ்.. பெல் அடித்த உடன் சினிமா.. இது அலாவுதீன் உலகம் இல்லை.. என் சொந்த ஊர்...
சுருக்கமாகவும், நன்றாகவும் இருக்கிறது ராம். வாழ்த்துக்கள்! என் வரிகளில் கொஞ்சம் தொடர முயல்கிறேன்! ஆனால் இவை அத்தனையும், ஊர் நீங்கி நெடுநாட்கள் சென்று மீண்டும் வந்ததும் நினைவில் வரும்! ஆம்! என் சொந்த ஊர்!