Thirumanthiram in Tamil - Moolamum Uraiyum

Discussion in 'Pujas Prayers & Slokas' started by swamy24598, Aug 14, 2013.

  1. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    கர்ப்பத்துக் கேவல மாயாள் கிளைகூட்ட
    நிற்குந் துரியமும் பேதித்து நினைவெழ
    வற்புறு காமியம் எட்டாதல் மாயேயஞ்
    சொற்புறு தூய்மறை வாக்கினாஞ் சொல்லே

    (ப. இ.) ஆருயிர் கருப்பையினுள் அருவுடம்போடு மட்டும் இருக்கும். பல்வேறு கருவிகளாக விரியும் மாயாகாரியக் கருவிக் கூட்டங்களைத் தொழிற்படுத்துவது நடப்பாற்றல். உயிர் கருவினுள் அருவுடம்போடு மட்டும் இருக்கும் நிலையினைப் புலம்பு நிலை என்பர். புலம்பு - கேவலம். நடப்பாற்றல் மாயா கருவிகளைக் கூட்டப் புலம்புப் பேருறக்கம் ஆகும். அவ்வுறக்கத்தினின்றும் வேறுபடுத்தி அந்நடப்பாற்றல் நினைவெழச் செய்யும். அதன்மேல் காமிய இன்ப நுகர்வுக்குரிய அன்பு எழும். அதனால் மாயேயமாய்ப் புறத்துத் தோன்றும் ஓசை முதலிய பொருள்கள் அகத்தை எட்டும். அங்ஙனம் எட்டச் செய்வதற்குத் தூண்டுங் கருவியாக நிற்பது அகப்புறக் கலனாகிய எண்ணம், மனம், எழுச்சி, இறுப்பு என்னும் நான்குமாம். அவற்றைத் தூண்டித் தொழிற்படுத்துங் கருவி நால்வகை ஓசையாகும். இவ்வோசை தூமாயையினின்றும் வெளிப்படுவன. எட்டாதல் - கிட்டும்படியாக. எட்டு: முதனிலைத் தொழிற்பெயர். அதனை எண்ணுப் பெயராகக் கொள்ளின் எண்வகை நுகர்வுப் பொருள்கள் எனக் கொள்க.
     
  2. swamy24598

    swamy24598 New IL'ite

    Messages:
    1,389
    Likes Received:
    377
    Trophy Points:
    0
    Gender:
    Male
    Thanks Shinara for immediate FB...
    regards
     

Share This Page