தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா என்றவர் வாக்கு என்றும் மனதில் கொண்டு வாழும் தமிழனே நீவிர் வாழிய பல்லாண்டு உணவு தரும் பூமிதாய்க்கும் சுவாசம் தரும் வாயுக்கும் தாகம் தணிக்கும் நீருக்கும் உயிர் நாடி கதிரவனுக்கும் பூமிக்கு குடை பிடிக்கும் வானுக்கும் நன்றி நவிலும் தமிழனின் திருநாளே பொங்கல் திருநாள் பஞ்ச பூதங்களுக்கு நன்றி சொல்லவும் பயிர் தொழிலுக்கு உதவும் மாட்டுக்கு நன்றி சொல்லவும் மண்ணை விட்டு விண்ணுக்கு சென்றாலும் நம்மை காக்கும் மூதாதையருக்கு வந்தனை செய்யவும் பொங்கல் வைத்து படையல் இடும் நன்னாளே நம் தமிழர் திருநாள் தை பொங்கல் திருநாள் . அனைத்து தமிழ் உள்ளங்களுக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் நல் வாழ்த்துக்கள் .வாழ்க வளமுடன்