அன்று செம்மண் கோலம் இட்டு அதன் மேல் மண் அடுப்பு வைத்து அடுப்பின் மேல் வெண்கல பானை வைத்து பானையில் தேங்காய் உடைத்த நீர் ஊற்றி அதனுடன் பசும்பால் பச்சரிசி களைந்த நீர் சேர்த்து பனையோலை எரித்து தீ மூட்டி பானை நீர் சூடாகி கொதித்து மேலே எழும்பி நாற்புறமும் பொங்கி வழிய கை நிறைய அரிசி எடுத்து மும்முறை பானையை சுற்றி ன் குலவை இட்டு பானையில் அரிசி இட்டு பொங்கலோ பொங்கல் என்று சொல்லி கதிரவனுக்கு நன்றி செலுத்தும் பண்பாடே தை பொங்கலின் தாத்பர்யம் இன்று வீட்டில் உள்ள அடுப்பில் பானை வைத்து பொங்கல் வைப்பதும் நம் தமிழ் பண்பாடே காலத்துக்கேற்ற மாற்றம் அதனால் காலங்களிலும் மாற்றம் மழை பொழியும் காலத்தில் பனி பொழிய பனி பொழியும் காலத்தில் வெயில் காய பருவ நிலை மாற்றம் மக்களை தாக்க தாக்குதலை தடுக்க கடவுளை நோக்க அவன் இதழில் புன்னகை கொண்டு நீலோத்பவ நயனங்களை இறுக மூடி தூங்குவது போல் பாவனை கொண்டு துயில் கொள்ளும் அழகே அழகு பூவுலகை ரட்சிக்கும் புருஷோத்தமா காத்தருள்வாய் உன் கண்ணின் மணிகளை அனைவருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துக்கள்
கவிதை பொங்கல் ஸுகமாக மணமாக நல்ல நிறமாக பொறுத்தமாக பொருட்செறிவுடன் ஆக்கப்பட்டு நிறைகுடமாக இருந்ததை வார்த்தையில் இனிப்பாக வழங்கிய அம்மாவுக்கு நன்றி கலந்த பொங்கல் வாழ்த்துக்கள். கடவுள் நம்பக்கம் என்றென்றும் மாசற்ற மனிதர்பக்கம் இன்றும் என்றும்....... வெப்ப நிலை எவ்வாறு மாறினாலும் கடவுள் நம்பக்கமே! நம்பிக்கை கை கொடுக்கும் .