Oh, It Is Margazhi And Time For Thiruppavai!

Discussion in 'Religious places & Spiritual people' started by suryakala, Dec 16, 2018.

  1. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear DD @joylokhi ,

    Thanks for your response. Hope you are doing fine with His blessings.

    May Thayar Andal bless you and your family.

    Om Namo Narayana.
     
  2. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    Dear @ChandrikaV sister,

    Welcome here again in this divine month of Margazhi!

    It is so nice to see you in this thread joining me in Pavai Nonbu! This month brings so many divine memories to every one of us.

    I am fine and hope you and your family are fine too. With Baba's blessings hope your sons got married..Be happy and cheerful always.

    May Lord Venkatesha and Thayar Andal bless you and your family in abundance.
     
    ChandrikaV likes this.
  3. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    B13.JPG
    ANDAAL.jpg

    மார்கழி மாதம் 9ம் நாள்.

    திங்கள்கிழமை.

    திருப்பாவை பாசுரம்- 9.

    தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய,
    தூபங் கமழத் துயிலணைமேல் கண்வளரும்
    மாமான் மகளே! மணிக்கதவம் தாழ்திறவாய்;
    மாமீர்! அவளை எழுப்பீரோ? உம்மகள்தான்
    ஊமையோ? அன்றிச் செவிடோ அனந்தலோ?
    ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
    மாமாயன், மாதவன், வைகுந்தன் என்றென்று
    நாமம் பலவும் நவின்றேலோ ரெம்பாவாய்.

    ராகம்- ஹமீர் கல்யாணி. தாளம் ஆதி.

    அனந்தல் - (களைப்பினால்) உறங்குகிறாளா? ஏமப்பட்டாள் - காவலில்இடப்பட்டாள்;

    பொருள்:

    பிரகாசமான நவரத்தினங்களால்கட்டப்பட்டமாளிகையில், சுற்றிச்சூழவிளக்கெரிய, நறுமண திரவியம்மணம்வீச, அழகியபஞ்சுமெத்தையில்உறங்கும்எங்கள்மாமன்மகளே! உன்வீட்டு மணிக்கதவைத்திறப்பாயாக. எங்கள் அன்பு மாமியே! அவளைநீஎழுப்பு. உன்மகளை எத்தனைநேரமாக நாங்கள்கூவிஅழைக்கிறோம்! அவள் பதிலே சொல்லவில்லையே! அவள்ஊமையா? செவிடா? சோம்பல்அவளைஆட்கொண்டுவிட்டதா? அல்லதுஎழமுடியாதபடிஏதாவதுமந்திரத்தில்சிக்கிவிட்டாளா? உடனேஎழு. எங்களுடன்இணைந்துமாயங்கள்செய்பவன், மாதவத்துக்குசொந்தக்காரன், வைகுண்டத்துக்கு அதிபதி என்றெல்லாம்அந்த நாராயணனின் திருநாமங்களைச்சொல்.

    Oh my uncle’s daughter, who sleeps, in the soft cotton bed, In the pearl filled Villa, Well lit from all sides, And full of the smoke of incense, Please open the ornamental door. Oh aunt, why don’t you wake her up, Is your daughter dumb or deaf, Or down right lazy, Or she is in trance of deep pleasurable sleep, Let us all call him the great enchanter, Madhavan and he who lives in Vaikunta, By several of His names, And get benefited, And worship the Goddess Pavai.

    May Thayar Andal and Perumal bless us all.
     
    ChandrikaV likes this.
  4. joylokhi

    joylokhi Platinum IL'ite

    Messages:
    1,725
    Likes Received:
    2,519
    Trophy Points:
    285
    Gender:
    Female
    Thanks again for the daily updates. I am following them daily and feeling blessed thro' you for the opportunity to hear the daily pasurams. God bless.
     
    suryakala likes this.
  5. ChandrikaV

    ChandrikaV IL Hall of Fame

    Messages:
    2,826
    Likes Received:
    2,654
    Trophy Points:
    308
    Gender:
    Female
    Thank you @suryakala sister for your kind words. Yes this marghazi maatham is very enchanting for me. Hope you are doing well. I am still waiting for Baba's blessing for my sons. He knows my prayers and hope 2019 will be the year. Thank you sistet.
     
    suryakala likes this.
  6. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    A31.jpg
    A15.JPG

    மார்கழி மாதம் -ம நாள். செவ்வாய்க்கிழமை.

    திருப்பாவை - பாசுரம் - 10.

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
    மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
    நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால்
    போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
    கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்
    தோற்றம் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ?
    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
    தேற்றமாய் வந்து திறவேலா ரெம்பாவாய்

    Oh lady fine, who has entered the heaven,
    Due to penance done in last birth,
    Won’t you reply,please
    Won’t you open the door,please
    If we pray the God Narayana,
    Having with him the scented garland,
    Made of holy basil,
    He would give us gifts, many,
    He is the same who is holy in times ancient,
    Sent Kumbhakarna to his death,
    After beating him in the field of war.
    Did that ogre give you his sleep,
    Before he went off from here,
    Oh lass who is very lazy,
    Oh lass, who is like pretty jewels,
    Wake up from your sleep, well,
    And open the door.

     
    joylokhi and ChandrikaV like this.
  7. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    TODAY.jpg
    MAALAXMI.jpg

    மார்கழி மாதம் 11ம நாள். புதன்கிழமை.

    திருப்பாவை பாசுரம்- 11.

    கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்துசெற்றார்
    திறலழியச் சென்று செருச் செய்யும்
    குற்றம் ஒன்றில்லாத கோவலர்த்தம் பொற்கொடியே
    புற்று அரவு அல்குல் புனமயிலே போதராய்
    சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
    முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாட
    சிற்றாதே பேசாதே செல்வ பெண்டாட்டி நீ
    எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்-

    Ragam, Thalam.
    Huseni- Misrachapu.

    கற்றுக் கறவை - கன்று போல உள்ள இளம் பசுக்கள்;
    செற்றார் - தகுதியற்ற முறையிலும் கர்வத்தினாலும் மோதுகின்ற எதிரிகள்; செரு - போர்; புற்று அரவு அல்குல் - புற்றுக்குள் நுழையும் பாம்பின் குறுகிய பாகத்தைப் போன்ற இடை, புனமயில் - காட்டு மயில்; சிற்றாது - அசைத்து கொடுக்காமல்; எற்றுக்கு - எதற்காக; உறங்கும் பொருள் - உறங்கும் நோக்கம்;


    Oh daughter of the cattle baron, who milks herds of cows, And wages war on enemies and makes his enemies loose their strength, Oh Golden tendril, Oh lass who has the mount of venus, Like the hood of the snake, wake up and come, when your flock of friends, Have come to your courtyard, And sing of Krishna, who has the colour of the cloud, Oh rich, rich lady, How can you neither move nor talk, And lie in deep trance, And not worship our Goddess pavai.

     
    joylokhi and ChandrikaV like this.
  8. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PAAVAIKRISH.jpg
    PAAVAITY.jpg
    ஸ்ரீஆண்டாள் திருவடி சரணம்.
    மார்கழி 12. வியாழ்க்கிழமை.
    திருப்பாவை பாசுரம்- 12.

    கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
    நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
    நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
    பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி
    சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
    இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
    அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam.
    KedaraGowla- Adi.

    பொருள்:

    தென் இலங்கை - தெற்கு திசையிலுள்ளஇலங்கை, அழகியசெல்வத்துடைய இலங்கை;
    பசியால் கதறித் திரியும் தங்கள் கன்றுகளை எண்ணிய எருமைகள் தங்கள் மடியில் சொரியும் பாலைச் சிந்தியபடியே அங்குமிங்கும் செல்கின்றன. அவை சொரிந்த பால் இல்லத்து வாசல்களை சேறாக்குகின்றது. இந்த அளவுக்கு விடாமல் பால் சொரியும் எருமைகளுக்கு சொந்தக்காரனான ஆயனின் தங்கையே! கொட்டுகின்ற பனி எங்கள் தலையில் விழ, உன் வீட்டு தலைவாசலில் நாங்கள் காத்து நிற்கிறோம். சீதையைக் கவர்ந்து சென்ற ராவணனின் மீது கோபம் கொண்டு அவனை அழிக்க ராமாவதாரம் எடுத்த கோமானாகிய அந்த நாராயணனின் பெருமையைப் பாடுகிறோம். நீயோ, இன்னும் பேசாமல் இருக்கிறாய். எல்லா வீடுகளிலும் அனைவரும் எழுந்து விட்ட பிறகும், உனக்கு மட்டும் ஏன்பேருறக்கம்?

    விளக்கம்:

    எருமைகள் பால் சொரிந்து உறங்கும் தோழியின் இல்ல வாசலை சேறாக்கி விட்டதால், அவளது வீட்டுக்குள் நுழைய முடியாத பெண்கள், அவளது வீட்டு வாசலிலுள்ள ஒரு கட்டையைப் பிடித்துக் தொங்கியபடி அவளை எழுப்பு கிறார்களாம் இந்தப் பாடலில். தலையிலோ பனி பெய்கிறது. மார்கழியில் எழுந்து குளிர்தாங்காமல் வெந்நீரில் குளிப்பவர்கள், இவர்கள் படும் கஷ்டத்தை உணர வேண்டும். கீழே பால் வெள்ளத்தால் குளிர்ச்சி, மேலே பனியின் குளிர்ச்சி, இத்தனையையும் தாண்டி இறைவனை அடைய எத்தனிக்கிறார்கள் இவர்கள். எவ்வளவு சிரமப் பட்டேனும் ஒருவர் விடாமல் எல்லாரும் அவன் திருப்பாதம் சேரவேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

    Hey, sister of the rich one, who owned, the mooing she buffalo with a calf, Which took pity on the calf, And gave out plenty,
    Of milk to it through its udder, And made his courtyard slushy with milk, We are assembled in thine yard, In the dripping fog, And sing about Him, Who killed in anger the king of Southern Lanka, And who is very dear one, But open your mouth, you don’t.. At least wake up now, Why this very deep slumber, For people of all houses around, Have already become alert And are ready to worship our Goddess Pavai.

     
    ChandrikaV and joylokhi like this.
  9. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    PERUMAL2.jpg

    மார்கழி மாதம் 13. வெள்ளிக்கிழமை.
    திருப்பாவை, பாசுரம் 13

    புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
    கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
    பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
    வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
    புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
    குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
    பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
    கள்ளம் தவிர்ந்து கலந்தேலோர் எம்பாவாய்.

    Ragam, Thalam-
    Atana, Misrachapu.

    பொருள்:

    புள்ளின் வாய் கீண்டான் - பறவையின் (பாகாசுரன்) வாயைப் பிளந்து கொன்ற (கிருஷ்ணன்); பொல்லா அரக்கன் - பொல்லாத அரக்கன் (ராவணன்), பொல்லாங்குகளுக்கு உறைவிடமானவன்; பாவைக் களம் - நோன்பு நோற்கும் இடம்; போது அரி கண்ணினாய் - பூவைப் போலும், மானைப் போலும் உள்ள கண்களை உடையவளே...

    பறவை வடிவம் கொண்டு வந்த பகாசுரனின் வாயைப் பிளந்து அழிக்கவும், பிறன் மனை நாடிய ராவணனின் தலையைக் கொய்யவும் அவதாரம் எடுத்த நாராயணனின் புகழைப் பாடியபடியே, நம் தோழியர் எல்லாரும் பாவை விரதம் இருக்கும் இடத்திற்கு சென்றாகி விட்டது. கீழ்வானத்தில் வெள்ளி முளைத்து விட்டது. வியாழன் மறைந்து விட்டது. பறவைகள் கீச்சிட்டு பாடுகின்றன. தாமரை மலர் போன்ற கண்களையுடைய பெண்ணே! விடியலை உணர்த்தும் இந்த அறிகுறிகள் தெரிந்தும் உடல்நடுங்கும்படி, குளிர்ந்த நீரில் நீச்சலடித்து குளிக்க வராமல் என்ன செய்கிறாய்? அந்தக் கண்ணனை நினைக்கும் ஒவ்வொரு நாளும் நன்னாளே! மார்கழியில் அவனை நினைப்பது இன்னும் சிறப்பல்லவா? எனவே, தூக்கம் என்கிற திருட்டை தவிர்த்து எங்களுடன் நீராட வா.

    விளக்கம்:

    "கள்ளம் தவிர்ந்து என்கிறாள் ஆண்டாள். தூக்கம் ஒரு திருட்டுத்தனம். பொருளைத் திருடினால் மட்டும் திருட்டல்ல! நேரத்தை வீணடிப்பதும் ஒரு வகையில் திருட்டு தான்! அதிலும், பகவானை நினைக்காத ஒவ்வொரு நிமிடமும் நமக்கு நாமே செய்யும் திருட்டு தான். வயதான பிறகு திருப்பாவையைப் படிக்கலமே என நினைக்கக் கூடாது. அப்போது, வாய் உளற ஆரம்பிக்கும். சில நேரங்களில் பாட முடியாமலே போய்விடும். இந்தப் பாடல் வெளியாகும் பத்திரிகையைப் பிடிக்க முடியாமல் கைகள் நடுங்கும். அப்போது, பகவானை நினைத்து என்ன பயன்?
    இளமையிலேயே, பகவானின் திருநாமங்களைச் சொல்லி, அவனது திருக்கதையைப் படித்தால் செல்வங்கள் நம்மைத் தேடி வராதோ?

    கண்ணழகு மிகுந்தவன் கண்ணன். அவனைத் தாமரைக் கண்ணன் என்றும் கூறுவார்கள். கண்ணனையும் இராமனையும் சேர்த்துப் பாட இசைந்து, இப் பாடலில் "புள்ளின் வாய்க் கீண்டானை' என்று கண்ணனையும், 'பொல்லாவரக்கனைக் கிள்ளிக் களைந்தானை' என்று இராமனையும் பாடினார்கள். கண்ணன் மாடுகளை மேய்த்துக் கொண்டு ஒரு நீர்நிலைக்குச் செல்லும்போது, கம்சனால் ஏவப்பட்ட ஓர் அசுரன் கொக்கு வடிவத்தில் இருந்துகொண்டு கண்ணனருகில் ஓடிவந்தான். கண்ணன் அந்தப் பகாசுரன் மீது பாய்ந்து அதன் அலகுகளை இரண்டாகப் பிளந்து அவனைக் கொன்ற நிகழ்ச்சியையும், ராமன், பொல்லாவரக்கனான ராவணனை எளிதில் அழித்த வீர சரித்திரத்தையும் பாடிக்கொண்டே எல்லாப் பெண்களும், ஒன்றுசேரும் இடமாகிய பாவைக் களத்திற்குச் சென்றுவிட்டார்கள். வானத்தில் வியாழன் நட்சத்திரம் மறைந்து வெள்ளியும் தோன்றிவிட்டது. பறவைகளும் சிலம்புகின்றன. இத்தகைய நல்ல வேளையில் யமுனையாற்றில் குள்ளக்குளிர அமிழ்ந்து நீராடாமல் படுத்திருக்கிறாயே! இது ஒரு நன்னாள்! தனிமையில் கொள்ளும் இறையின்பமும் கள்ளம். இப்படிப்பட்ட கள்ளம் தவிர்த்து எங்களோடு சேர்ந்து கண்ணனை அனுபவிக்கலாம் எழுந்து வா! என்று அழைக்கிறார்கள் என்று இப்பாசுரம் கூறுகிறது.

    The lasses have reached, The place of prayer for Pavai, Singing the fame of our Lord. Who killed the ogre who came like a stork. And who cut off the heads of the bad ogre, One by one. The nevus has risen in the morn, The Jupiter has vanished from the sky, The birds are making lot of sound, Of beautiful one with wide eyes red as a flower. Without taking bath by dipping again and again, In ice cold water, Would you prefer to sleep. Oh lass, On this holy day, Do not stay aside, And come to bathe with us. And worship our Goddess Pavai.

     
    ChandrikaV and joylokhi like this.
  10. suryakala

    suryakala IL Hall of Fame

    Messages:
    8,638
    Likes Received:
    10,879
    Trophy Points:
    470
    Gender:
    Female
    ANDAL KRISHNA.jpg

    மார்கழி மாதம்14ம் நாள், சனிக்கிழமை.

    திருப்பாவை- பாசுரம் 14.

    உங்கள் புழக்கடை தோட்டத்து வாவியுள்
    செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
    செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தவர்
    தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
    எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
    நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
    சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
    பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

    பொருள்:

    வாவி - குளம்; செங்கழு நீர் வாய் நெகிழ்ந்து - செங்கழு நீர் மலர்கள் மலர்ந்து(தாமரை); ஆம்பல் வாய் கூம்பின - அல்லி(கரு நெய்தல்) மலர்கள் குவித்து கொண்டன; சங்கு இடுவான் - சங்கு ஊதி..

    எங்களை முன்னதாகவே வந்து எழுப்புவேன் என்று வீரம் பேசிய பெண்ணே! கொடுத்த வாக்கை மறந்ததற்காக வெட்கப்படாதவளே! உங்கள் வீட்டின் பின்வாசலிலுள்ள தோட்டத்து தடாகத்தில் செங்கழுநீர் மலர்கள் மலர்ந்து விட்டன. ஆம்பல் மலர்கள் தலை கவிழ்ந்தன. காவி உடையணிந்த துறவிகள் தங்கள் வெண்பற்கள் ஒளிவீச கோயில்களை நோக்கி, திருச்சங்கு முழக்கம் செய்வதற்காக சென்று கொண்டிருக்கின்றனர்.ஆனால், பெண்ணே! சங்கும் சக்கரமும் ஏந்திய பலமான கரங்களை உடையவனும், தாமரை போன்ற விரிந்த கண்களையுடையவனுமான கண்ணனைப் பாட இன்னும் நீ எழாமல் இருக்கிறாயே!

    விளக்கம்:

    கொடுத்த வாக்கை தவற விடவே கூடாது. வாக்கு கொடுப்பது மிக எளிது. அதைக் காப்பாற்ற முடியுமா என தெரிந்து பேச வேண்டும். வாக்கு கொடுத்து விட்டு பிறரை ஏமாற்றுபவர்கள், கொஞ்சம் கூட வெட்கமின்றித் திரிகிறார்களே என ஆண்டாள் வருந்துகிறாள். நாக்கு சரியானதை மட்டுமே பேச வேண்டும், சொன்னதைச் செய்ய வேண்டும் என்பது இப்பாடல் உணர்த்தும் கருத்து.

    எல்லோருக்கும் முன்னதாகவே தான் எழுந்திருந்து எங்களை எழுப்புவதாகச் சொல்லிவிட்டு, எல்லோரும் வந்து எழுப்பும்படி படுத்திருக்கும் ஓர் ஆயர்மகளை நங்காய்! நாணாதாய்! என்றெல்லாம் சொல்லி எழுப்புகிறார்கள் தோழியர்கள். கதிரவன் தோன்றியதும் செங்கழுநீர் மலர் மலர்ந்து, ஆம்பல் வாய் மூடிக் கொள்வதை ஓரிடத்தில் பார்த்த பெண்கள், அதையே அனுமான ப்ரமாணமாகக்கொண்டு, உங்கள் வீட்டுப் புழக்கடையில் உள்ள வாவியில், செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பின என்றும், செங்கற் பொடியின் நிறத்தைப் போன்று செந்நிறமுடைய ஆடையை அணிந்த துறவியர் சத்துவகுணம் நிறைந்த விடியற்காலையை உணர்த்துவதற்காகச் சங்கு ஒலிக்கத் தாங்கள் தங்கள் கோயிலுக்குச் சென்றுவிட்டார்கள். சிலர் சென்றுகொண்டு இருக்கிறார்கள் என்று கூறி, வாய்ச்சொல்லில் வல்லவளே எங்களை எழுப்புவதாகச் சொன்னாயே தவிர செயலில் காட்டவில்லையே! இதற்கு நீ வெட்கப்படுவதாகவும் தெரியவில்லை! ஆனால், நீ பேச்சில் வல்லவள், அனுமன் முதன் முதலில் ராமனைச் சந்தித்தபோது அவனோடு சிறிது உரையாடினான். அவனுடைய பேச்சில் ராமன் தன் மனதைப் பறிகொடுத்தான்.
    நீயும் உன் சொற்களால் கண்ணனின் மனதைக் கவரக்கூடியவள். பெண்களில் சிறந்தவளே! கண்ணன் அன்புமிக்க அடியார்களுக்கு நான்கு கைகளைக் கொண்டவனாகவே காட்சியளிப்பான்; பகைவர்களுக்குக் காட்சியளிக்கும்போது இரண்டு கைகளை உடையவனாகவே தோன்றுவான். கண்ணன் கமலக்கண்ணன்! அவனுடைய கண்ணழகையும், மிகவும் ஒளிபொருந்திய திருச்சக்கரத்தையும், செங்கமல நாண்மலர்மேல் தேன் நுகரும் அன்னம் போன்ற வெள்ளை விளிசங்கினையும் ஏந்தி இருக்கும் அழகோடு சேர்த்துப் பாடுவதற்கு எழுந்து வாராய்! என்று எழுப்புகிறார்கள்.

    Today is the Auspicious day of Vaikunda EgadesiVaikunda Ekadashi!

    In the pond in the backyard of your house. The lily in the ponds have opened, The night flowers have closed, The white toothed sages, Who wear clothes as red as, The powder of brick, Are going to their temples. To sound the conch. You who promised to wake us up, Please wake up, Are you not ashamed, You chatter box, Let us all sing about the lotus eyed one, Who has a holy conch and wheel, In his hands, And worship our Goddess Pavai.
     
    ChandrikaV likes this.

Share This Page