சகஸ்ரநாமம் இந்த சகஸ்ரநாமத்தை முழுவதுமாக பெண்கள் யாரும் சொல்லக்கூடாது என்ற நியமம் உள்ளது அப்படியான ஒரு நியமமுள்ளதால் பார்வதி தேவி சிவனாரிடம் நாதா ஆண்களான நீங்கள் ஆயிரம் பகவத் நாமாவை சகஸ்ரநாமமாக சொல்லி உய்வடைவீர்கள் பெண்களான நாங்கள சகஸ்ரநாமம்முழுவதும் சொல்லகூடாது என்றால் இந்த ஆயிரம் நாமை நாங்கள் சொல்ல என்ன செய்யனும் வேறு ஏதும் வழி உண்டா - பார்வதி தேவி சிவனிடம் கேட்க சிவனார் சொன்னதே ஶ்ரீராம ராம ராமேதி ரமே ராமே மனோரமே ஸகஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே ஸ்லோகம் . அது பெண்கள் ஆயிரம் நமாவான சகஸ்ரநாமம் சொன்ன பலனை எளிதாக பெறுவதற்காக சொல்லப்பட்ட ஒன்று. எம்.எஸ்.சுப்பலஷ்மி அம்மா திருப்பதி தேவஸ்தானத்திற்கு சகஸ்ரநாம ஒலி நாடா பதிவு செய்ய மஹா பெரியவா அனுமதிக்க வில்லை. தேவஸ்தானம் மற்றும் சிலர் நிர்ப்பந்தம் காரணமாக ஒலிநாடா கொடுக்கப்பட்டது. இதை மஹா பெரியவா கலிகாலம் என்று சொன்னதாக சொல்லப்படுகிறது. பெண்கள் விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொல்ல கூடாது. ஆண்கள் சகஸ்ஸரநாமம் முழுவதும் சொன்னால் தான் பலன் போல. எம்எஸ் அம்மா சகஸ்ரநாம ஒலிநாடா வெளியிட எண்ணி காஞ்சியில் இருந்த மகாபெரியவாளிடம் ஆசி வாங்க சென்றபோது, மகாபெரியவாளே எம்எஸ் அம்மாவிடம் சொன்ன தகவல் தான் “பெண்கள் சகஸ்ரநாமாவை சொல்ல கூடாது அதை ஒலிநாடாவில் உன் குரலில் பதிவு செய்து பெண்களை சகஸ்ரநாமாவை சொல்ல வைக்கும் தவறான முன் உதாரணம் ஏற்படுத்த வேண்டாம்.” என்றார். ஆனாலும் கணவர் சதாசிவம் மற்றும் அன்றய HMV ஒலிபேழை வெளியீட்டாளர்களின் வற்புறுத்தலால் எம்எஸ் அம்மா சகஸ்ரநாமா ஒலி நாடா வெளிவந்து . HMV வியாபாரம் பெருகியது. மகாபெரியவாளிடம் இந்த தகவல் போனபோது ஸ்வாமி எம்எஸ் அம்மா மீது கோபபடவில்லை மாறாக அன்றே சொன்னார் மகாபெரியவா “கலியில் பெண்கள் செய்ய கூடாததை எல்லாம் - உரிமை என - தனக்கு பிடிக்கிறதோ பிடிக்கலையோ மற்றவர்கள் சொல்லுகிறார்கள் என்றோ அல்லது தானே போராடியோ சாஸ்திர விரோதமாக பலவற்றை செய்வர் அதில் இதுவும் ஒன்று என்ன செய்ய காலம் அப்படி“ என்றார். ஆயிரம் நாமாவை சொல்லுவதற்க்கு பதில் ராமா ராமா ராமா என மூன்று தரம் சொன்னால் இந்த ஆயிரம் நாமத்தையும் சொன்னபலன் கிட்டிவிடும் ( பெண்களுக்கு சாஸ்திரம் எவ்வளவு எளியதாக கூறியுள்ளது) ஜெய் ஶ்ரீராம்!
@sangrag It is not my creation. It is sourced from authentic quarters and with a view to know the pulse of theist among members and their valuable views, i posted this blog. I am neither glad or sad about the averment in the blog. Thanks & Regards. God Bless.