ஆயுதம் என்னும் சொல்லில் கூட கடுமை ஒன்று தொனிக்கிறது. ஆடி வரும் இவன் அதனை நாட வேண்டாம் என்றே படுகிறது. இவன் முதல் சொல் உதிர்த்த அப்பொன்னாள் இன்னும் நினைவில் இருக்கிறது. இன்றோ சிறிதே வளர்ந்து முன்னால் செல்வதில் உள்ளம் மகிழ்கிறது. குழந்தையை போருக்கனுப்பும் தாதை உள்ளம் படுவது என்னவென்றே மற்றுமொரு முறை உணரும் இப்போதை நான் தவிர்த்திட முடியாதென்றே உணர்ந்தே,மீண்டும் சிறு துயரும் கொண்டேன், எனினும் தனக்கென ஓர் தனி அடையாளம் பெற விழையும் இவன் பகை வென்றதுமே மற்றும் ஓர் இனிய நிகழ்வு ஒன்றில் மீண்டும் தந்தையென கடமை முடிப்பேன். முருகா! குழந்தை தான் நீ என்றும்! அழகா! என்றும் உன்னுடன் இருப்பேன்! உன்னிடம் பணிவதில் என்றைக்கும் எனக்கொரு பெருமிதம் உண்டு கண்ணே! ஈராயிரம் கண் நான் கொண்டாலும் அவை போதாதென்றே உணர்கின்றேன்!
hai RGS, Lovely likely holy true lyrics . After a very very long time i am reading your writeup. by the way how are you?
Rgs, Very lovely poem. Spiritual as well as can be taken in a normal human life issue. Good to read it, especially you ending the poem divinely. Thanks for sharing. Vaidehi
Thanks a lot Sreema. Happy to get your feedback after a long time. Am doing good. How about you? -rgs