பிறர் தவறை மன்னிக்கும் மனமும் தன் தவறை தவிர்க்கும் மனமும் தவறி தவறை செய்தால் மன்னிப்பு கோரும் மனம் வேண்டும் தந்தருள வேண்டும் என் இறைவா முன்னால் நடந்தவையும் நிழல் பின்னால் வருபவையும் நிழல் தற்போது நடப்பவைகளே நிஜம் என்ற எண்ணம் வேண்டும் தந்தருள வேண்டும் என் இறைவா மீண்டும் மீண்டும் இவ்வுலகில் அவதரித்து கர்ம பலனை அனுபவிக்கும் பிறப்பில்லா வரம் வேண்டும் தந்தருள வேண்டும் என் இறைவா