என் இதயமே என் உயிரே என் அன்பைப் பெற்றவனே என்றெல்லாம் அழைத்தாள் முத்தே பவழமே வைரமே வைடூரியமே தங்கமே கோமேதகமே ரத்தினமே என்றெல்லாம் அழைக்க வைத்தாள் அவளை அழைத்தவை அனைத்தும் வேண்டுமென விரும்பி கேட்டனர் அவனைப் பெற்றவர்கள் தன் மகள் விருப்பம் நிறைவேற எதையும் செய்ய தயார் என்றனர் அவளைப் பெற்றவர்கள் தான் அழைத்தவை அனைத்தும் தனக்கே வேண்டுமென கேட்டாள் அவள் பிழை எங்கே என்று கேட்கிறோம் நாம்