போகட்டும் தனிமை (8Jul2009) நான் இருப்பதோ கூட்டத்தில்.. என் மனமோ தனிமையில் நம் காதல் ரோஜா வனத்தில்.. என்னை மகிழ்ச்சி தழுவினாலும் என் உள்ளமோ ஏனோ வெறுமையை தான் தழுவுதே! உன் மெல்லிய பார்வையும் மௌன புன்னகையும் என்னை வதைக்கிறதே! கொஞ்சும் குரல் கேட்க என் காதுகளோ ஏங்குகின்றன நீயோ உடலை விட்டுவிட்டு உயிரை எடுத்துச் சென்றாய்.. என் கண்ணங்கள் காய்ந்தன இதழ்கள் வறன்டன கால்கள் எதையோ தேடுதே கண்கள் உறக்கத்தை மறுக்குதே மேனி மோட்சம் தேடுதே! ஞாபகங்கள்(9Jul2009) ஞாபகங்கள்.. ஒரே ஞாபகங்கள்! பத்து நாட்கள் கண்ட சொர்கத்தை மீண்டும் காண மனம் துடிக்குதடா! உலகை மறக்கடிக்கச் செய்யும் குரல் கேட்க என் காதுகள் ஏங்குதடா! உலகை வெல்லும் நம்பிக்கை தந்திடும் தோளில் என்றும் சாய்ந்திட வேணுமடா! ரோஜா இதழினும் மென்மையான உன் பார்வையின் ஞாபகம்! வீசும் தென்றலினும் இனிதான உன் தீண்டலின் ஞாபகம்! மனதை திசைத் திருப்ப முடியாத ஞாபகங்கள்.. ஒரே ஞாபகங்கள்! -தேவி @ பூஜாஅருண்.
hi Suganya.. its very nice 2 hear ur compliment ma.. yetho ennal mudinthathai yeluthukiren.. thanx ma -devi.