போகாத ஊருக்கு வழிதேடி சென்ற பாதையை திரும்பக்காட்டி தன்நலம் கருத வழிகாட்டி பொதுநலம் மறக்க பாடம் புகட்டி நீயே நான் என நம்பிக்கையுட்டி மீண்டும் மீண்டும் வர வழிவகுத்து இங்கும் அங்கும் எனை அலைக்கழித்து என்னை களிமண்ணாய் பிடித்து உன் விருப்பம்போல் என்னை உருவாக்கும் நீ ஒரு குரங்கு