காலால் எட்டி உதைத்தாலும் கட்டியணைத்துக் கொண்டேன் முகத்தில் துப்பினாலும் முகமகிழ்ச்சி அடைந்தேன் கன்னத்தில் அறைந்தாலும் கட்டியணைத்துக் கொண்டேன் தலைமுடியை இழுத்தாலும் முகமகிழ்ச்சி அடைந்தேன் முகத்தை கீறினாலும் கட்டியணைத்துக் கொண்டேன் மூக்குக்கண்ணாடியை உடைத்தாலும் முகமகிழ்ச்சி அடைந்தேன்.
எத்தனை எத்தனை துன்பம் தந்தாலும் முகத்தில் மகிழ்ச்சி மட்டுமே கொள்ளத்தூண்டும் நாம் பெற்ற பிள்ளைகள் தானே.......