அண்ணன்,அக்கா,தம்பி, தங்கை இவர்கள் எல்லாம் போட்டியிட இருக்கும் செல்வத்தை தனக்கென்று நினைக்காமல் தான் பெற்ற செல்வங்களை படிக்க வைக்க அயராது உழைக்கும் பெற்றோரை தன் கண்களாய் நினைத்து அவர்கள் கண் கலங்காது இன்புற இரவு பகல் பாராது கடுமையாய் உழைத்து பெற்ற பட்டத்தை பெருமையுடன் கையிலேந்தி வேலை வாய்ப்பைத்தேடி பலவிடங்கள் சென்றால் சிபாரிசு இல்லையா என்று கேட்டு ஏளனம் செய்ய நான் வாங்கியதென்ன நூல் பட்டமா?