கடல் சிப்பி பொத்தி பொத்தி வளர்த்தது தன் குழந்தை முத்தை விளைந்த முத்து கிரீடத்தில் விளைத்த சிப்பி கடல் ஓரத்தில் பொத்தி பொத்தி வளர்த்த பிள்ளையை வைரமாக மிளிர செய்த தாயும் ஒதுங்கி கிடப்பது ஓரத்தில் வீட்டோரத்தில் தாய்மை என்பது இது தானா
கெட்டியாய் வளர்த்து உயரத்தில் ஏற்றி விட்டு எட்டி நின்று பார்க்கும் தாயின் குணம் என்றும் கிரீடத்தில் மின்னும் வைரமே........ அருமையான கவிதை அம்மா......
Periamma, அட ஆமாம் லே இப்படி சொன்னாதான் தெரியுது நம்ம பெருமையை..தாயின் பெருமையை! நீங்களும் ரொம்ப அழகா சொல்லி இருக்கீங்க தாயின் பெருமையை Raman! Sriniketan
உங்கள் சிந்தனைக்கு மறுபடியும் ஹேட்ஸ் ஃஆப் அம்மா! நீங்களும் பார்கவியும் வேறு கோணத்தில் சிந்தித்து எழுதுகிறீர்கள்! அதை படிக்கும் போது புது விஷயம் ஒன்றை அறிந்துக்கொண்ட நிறைவு! ஒதுங்கி இருப்பதே தாயின் சிறப்பு! ஒதுக்காமல் அருகில் இருத்து கொள்வது பிள்ளையின் கடமை!